Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரித்
'புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் ஹாபீஸ் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 37 உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி நமது கிழக்கு மாகாண அபிவிருத்தி, இன ஒற்றுமைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி மூவின மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாறறும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
'கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் இணைந்து சத்தியக் கடதாசி ஊடாக வழங்கிய ஆதரவு காரணமாக கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பல அனுபவங்களை பெற்றுள்ள புதிய முதலமைச்சர் நமது கிழக்கு மாகாணத்தை சிறந்த முறையில் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டு கிழக்கில் வாழும் எல்லா இன மக்களும் இன ஒற்றுமையுடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று எங்களின் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா அன்று தனது உயிரையும் துச்சமென நினைத்து குரல் கொடுத்தார்.
இன்றைய நிகழ்வு கிழக்கு மாகாண வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய நாளாகும். கடந்த 2008ம் ஆண்டில் இருந்து வரவு – செலவு திட்டங்கள் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்தே வாக்களித்தனர்.
இன்று வழமைக்கு மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியும் இனைந்து ஏகமனதாக வரவு செலவு திட்டத்தை அஙகிகரித்த நாளாகும். இந்த நிலைமையினை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் நோக்கமும் கிழக்கில் இவ்வாறான நிலைமை உருவாக வேண்டும் என்பதே.
கடந்த 2008ஆம் ஆண்டில் முதலாவதாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்தவுடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் மக்களால் முன்வைக்கப்பட்டது. இருந்த போதிலும் அன்றைய சூழ்நிலையில் உடனடியாக கிழக்கில் அறுந்து போயிருந்த இன உறவுகளையும், சமாதானத்தையும் உருவாக்கும் தூர சிந்தனையில் தேசிய காங்கிரஸின் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கினோம். அவருடைய 4 வருட காலத்தில் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி, இன ஒற்றுமை என்பவைகளில் பாரிய வளர்ச்சியைக் கண்டது.
தமிழ் மக்களின் போராட்டத்தை அன்று, அல்பிரட் துரையப்பா காட்டிக் கொடுத்தது போன்று அதாஉல்லாவும் 4 மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தைக் காட்டிக் கொடுத்ததாக சிலர் கிழக்கு மாகாண பிரதேங்கள் முழுவதும் போஸ்டர் ஒட்டினார்கள். சில காலம் சென்றதும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் உண்மையான யதார்த்தங்களை புரிந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபைக்கான 2ஆவது தேர்தல் 2012ஆம் ஆண்டு நடைபெற்று கிழக்கு மாகாண 01வது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீட் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவி ஏற்கும் வைபவத்தில் நான் உரையாற்றும் போது சந்திரகாந்தன் முதலமைச்சராக பதவி வகித்த 4 ஆண்டு காலம் கிழக்கில் இன ஒற்றுமை, வரலாற்று அபிவிருத்தி பணிகள் என்பன சிறப்பாக நடை பெற்றன. இந்த வழியை பின் பற்றியதாக 01வது முஸ்லிம் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள நஜீப் அப்துல் மஜீட்டும், அமைச்சரவையில் செயல்பட்டு கிழக்கில் வாழும் மூவின மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும் இல்லை எனில் கிழக்கு மாகாண மக்கள் சந்திரகாந்தனின் 4வருட காலத்தைப்பற்றி பேசுவார்கள் என்று ஆலோசனை வழங்கினேன்.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் தொய்வு நிலை தோன்றியுள்ள நிலைமையில் புதிய முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் பதவி ஏற்றுள்ளார். எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையின் செயல்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு மூவின மக்களின் நம்பிக்கையை நமது மாகாண சபை பெற நாம் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்.
சென்ற அமர்வில் நான் உரையாற்றும் போது கிழக்கு மாகாண சபையில் எல்லோரும் ஆளும் கட்சியாகவே செயல்பட வேண்டிய புதிய சூழ்நிலைமை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டேன். அது இப்போது நிஜமாகி உள்ளது.
நமது நாட்டில் என்றுமில்லாத புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
100 நாள் திட்டத்தை முன்னெடுக்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதனால்தான் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு, அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு, அரசியல் அமைப்புக்களில் மாற்றங்கள் எல்லாம் செயல்படுத்தக் கூடிய சூழ்நிலமை ஏற்பட்டுள்ளது.
100 நாள் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 70 நாட்களுக்குப் பின் நமது நாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்ற பலம் என்பவைகளை உருவாக்கிய பின் 6 ஆண்டுகளுக்கான நிலையான ஆட்சியினை நாம் நடாத்தக் கூடிய பலம் எமக்கு கிடைக்கும். எனவே, நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களில் நமது நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்ப காலத்தில் சிறுபான்மை மக்களின் நன்மதிப்பை பெற்று வந்தன. குறிப்பாக முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களான டீ.எஸ்.சேனா நாயக்கா, டட்லி சேனா நாயக்கா ஆகியோர்கள் செயல்பட்ட போது பாகுபாடு காட்டாமல் செயல்பட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர். அவர் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அரச அமைச்சராக தெரிவு செய்யப்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
ஒரு கட்சியின் தேசிய அமைப்பாளரின் கருத்துக்கள் என்றும் ஒரு இனத்தின் தலைவர்களை இழிவு படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. புதிய முதலமைச்சர் பதவி ஏற்ற மங்களகரமான சூழ்நிலையில் நமது உரைகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
46 minute ago
1 hours ago