2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்றக் கோரி உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், சொந்த இடங்களில் தாங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்;று வலியுறுத்தி கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் திங்கட்கிழமை (16) உண்ணாவிரதம்  முன்னெடுக்கப்பட்டது.
 
சம்பூரில் இடம்பெயர்ந்து கிளிவெட்டி, மணற்சேனை, பட்டித்திடல், கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் 300 க்கும் அதிகமானோர் இந்த உண்ணாவிரத்;தில் ஈடுபட்டனர்.

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான குண்டவீச்சை தொடர்ந்து  இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள், கடந்த ஒன்பது வருடங்களாக  நலன்புரி நிலையங்களிலேயே  வசித்து வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .