2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறுவர் உரிமைகள் தொடர்பான முறைப்பாட்டுப் பெட்டிகள்

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்


தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் சுற்றறிக்கைக்கு அமைவாக, கிண்ணியா பிரதேச பாடசாலைகளில் சிறுவர் உரிமைகள் தொடர்பான முறைப்பாட்டுப் பெட்டிகள் புதன்கிழமை (18) பாடசாலை அதிபர்களுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.


சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாணவர்களாலும் பெற்றோர்களாலும் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளை சட்ட ரீதியாக அணுகுவதற்காக பாடசாலைகளில் இந்த முறைப்பாட்டுப் பெட்டிகள் வைக்கப்படவுள்ளன.


இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள 25 பாடசாலைகள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக கிண்ணியா பிரதேச சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் அங்கு கருத்தத் தெரிவிக்கையில்,
இந்தப் பெட்டிகளின் திறப்புக்கள் அதிபர்களிடம் கையளிக்கப்படமாட்டாது. அது பிரதேச செயலககத்தில் பிரதேச சிறுவர் பராமரிப்பு உத்தயோகத்தரின் பொறுப்பிலே இருக்கும்.


மாதம் ஒரு முறை பிரதேச சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சிறுவர் உரிமைகள் தொடர்பான பொலிஸ் அதிகாரி ஆகியோர் பாடசாலைக்குச் சென்று அவற்றைத் திறந்து முறைப்பாடுகளை பெற்றுகொள்வர்.


எனினும் முறைப்பாடுகள் இருப்பின்  குறித்த பாடசாலையின் அதிபருடன் கலந்தாலோசனை செய்த பின்னரே இது குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்' என்று தொவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .