Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 25 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் தற்காலிகமாகக் கடமையாற்றிவரும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள், நாளை வியாழக்கிழமையும் எதிர்வரும் 2 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண நிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மநாதன் தலைமையில் திருகோணமலை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களில், 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றி வருகின்றவர்களுக்கு இதனடிப்படையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நேர்முகப் பரீட்சைகளுக்காக திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 187 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்தோருக்கான நேர்முகப் பரீட்சைகள், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 180 நாட்களுக்கு மேல் பணியாற்றி வரும் 295 பேர், மேற்படி நேர்முகப் பரீட்சைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிவரும் தற்காலிகப் பணியாளர்களை, நிரந்தமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றன.
இந்த நேர்முகப் பரீட்சைகளுக்காக, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றும் 211 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago