Thipaan / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, மணியரசங் குளத்துக்கு காட்டு யானைகள் நீராட வருகை தருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இக்குளத்தில் நீராட, சுமார் ஆறு யானைகள் மாலை வேளையில் வருகின்றன.
இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகளால் குள அணைக்கட்டு சேதமாக்கப்படுவதால் இப் பிரதேசத்தில் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள், இது தொடர்பில் வன ஜீவராசி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago