Editorial / 2026 மே 03 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மாற்றத்தைத் தொடர்ந்து, பாடசாலை போக்குவரத்து வாகனக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன போக்குவரத்து சங்கத்தின் தொழில்முறை சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவிக்கையில்:
“டீசல் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக, போக்குவரத்து கட்டணங்களை மாற்றியமைப்பது அவசியமாகியுள்ளது. எனினும், இந்த அதிகரிப்பை நியாயமான முறையில் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கட்டண உயர்வு தொடர்பாகத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பெற்றோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். இந்த அதிகரிப்பு சதவீத அடிப்படையில் அன்றி, ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
கடந்த காலங்களில் டீசல் விலை பலமுறை உயர்ந்த போதிலும், பெற்றோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வழங்குநர்கள் கட்டணங்களை உயர்த்தாமல் தவிர்த்து வந்ததாக டி சில்வா சுட்டிக்காட்டினார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் பழைய கட்டணத்திலேயே சேவையைத் தொடர்வது கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்:
“நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பெற்றோருக்குப் சுமை ஏற்படாத வகையில் இந்தச் சேவையைத் தொடர்ந்து வந்தேன். ஆனால், இப்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். டீசல் விலை உயர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு நியாயமான தொகையை மாத்திரம் அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியான எரிபொருள் விலை உயர்வால், இந்த மாற்றத்தைத் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.”
பெற்றோர் மீது பாரிய சுமையை ஏற்றுவது தமது நோக்கமல்ல எனவும், எரிபொருள் செலவுக்கு ஏற்பக் கட்டணத்தைச் சீர்செய்வதே தமது நோக்கம் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .