Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலியின் அழைப்பை ஏற்று மாலைதீவுக்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அங்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூ.எல் - 101 விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (02) காலை புறப்பட்டுச்சென்றனர்.
மாலே சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் சிறந்த வரவேற்பு அளித்தார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.
பிரதமருடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயா கமகே, அனோமா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago