Editorial / 2025 ஜூலை 16 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் எடுத்துச் செல்லும் கெசல்கமுவ ஓயாவை ஊடறுத்து கட்டப்பட்ட கேபிள் பாலத்தை முழுமையாக புதுப்பிக்கும் பணி, பொகவந்தலாவ, கெர்கஸ்வோல்ட் எல்படை மேற்பிரிவு,கீழ் பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவால் தன்னார்வத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த கேபிள் பாலங்கள் இரண்டும், அப்போதைய தேயிலைத் தோட்ட மேலாண்மை அதிகாரியால் நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தின் மலைப்பாங்கான பகுதி மற்றும் பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் தோட்டங்களை இணைப்பதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக கட்டப்பட்டது.

170 அடி நீளமும் சுமார் 5 அடி அகலமும் கொண்ட இந்தப் பாலங்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் தினமும் கடந்து செல்கின்றனர். சுமார் மூன்று ஆண்டுகளாக, பாலத்தின் மரப் பகுதி முற்றிலும் சிதைந்து உடைந்தது, அந்த பாலங்களில் நடப்பது மிகவும் ஆபத்தானதாகவே இருந்தது.
தோட்டப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் பாலங்களை புனரமைத்து தருவதாக உறுதி அளித்திருந்தாலும், அத்தகைய வாக்குறுதிகளை அளித்த அரசியல்வாதிகள் தேர்தலுக்குப் பிறகு தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, என்று எல்படை மேற்பிரிவு, கீழ் பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

கெசல்கமுவ ஓயா வின் குறுக்கே தற்போது பயணிக்கும் தோட்டப் பகுதி மக்களுக்கு ஒரு தற்காலிக பாலம் கட்டப்பட்டுள்ளது. பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் தோட்ட முகாமையாளரிடம் இருந்து காய்ந்த யூ கலப்டிஸ் மரத்தைப் பெற்று, மரத்தை துண்டு துண்டாக வெட்டி, புதிய பலகைகளை பயன்படுத்தி கேபிள் பாலத்தை முழுமையாக புதுப்பித்து வண்ணம் தீட்ட இளைஞர் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கேபிள் பாலத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு முடிந்தவரை தேநீர் மற்றும் உணவு வழங்கவும், பாலத்தில் நடந்து செல்லும் மக்களுக்கு வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் பாலத்தை புதுப்பிக்க தேவையான மின்சார வசதி, பாலத்திற்கு அருகே உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பாலத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஊடகங்களிடம் பேசுகையில், “ஒற்றுமையும் முயற்சியும் இருந்தால், இதுபோன்ற எந்த ஒரு பொதுவான பணியையும் வேறு யாராவது செய்வார்கள் என்று காத்திருக்காமல் செய்ய முடியும்” என்பதை உணர்ந்து உள்ளதாகக் கூறினர்.

இந்த கேபிள் பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொருளாதார உதவிகளை, கொழும்பில் வசிக்கும், எல்படை மேற்பிரிவை சேர்ந்த இளைஞர்கள் குழுவும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






23 minute ago
57 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
57 minute ago
4 hours ago
4 hours ago