2025 ஜூன் 07, சனிக்கிழமை

தபாலட்டைப் போராட்டம்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 20 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி, வட மாகாண மீனவர்கள் இணைந்து 20,000 தபாலட்டைகளைஅனுப்பும் போராட்டம், யாழ். மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சம்மேளன அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டது.

யாழ். மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை, மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் நூர் முஹமட் அலம், கிளிநொச்சி (பூநகரி) மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், முல்லைத்தீவு மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் ஏ.மரியதாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த தபாலட்டைப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

ஜனாதிபதி மைத்திரிசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இந்த தபாலட்டைகள் அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .