2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இறுதி ஊர்வலம்...

Princiya Dixci   / 2015 மே 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதனின் இறுதி ஊர்வலம், வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன், புதன்கிழமை (13) பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டு, வல்லுறவுக்குட்படுத்தப்பட்தன் பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது இறுதிக்கிரியை இன்று நடைபெற்ற நிலையில் தீவகம் முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. மாணவியின் சடலம் அவரது பாடசாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டடு புங்குடுதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த மாணவியின் கொலைக்கு எதிராக புங்குடுதீவு, காரைநகர் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. (படங்கள்: எம்.றொசாந்த்)


  Comments - 0

  • Sabarathnam Namashivayam Monday, 18 May 2015 04:04 AM

    Unbearable incident cannot be accepted by human being culprits must be punished immediately

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X