2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இத்தாலிய சுப்பர் கிண்ணம்: சம்பியனானது நாப்போலி

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் நாப்போலி சம்பியனானது.

சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பொலொக்னாவுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே நாப்போலி சம்பியனானது.

நாப்போலி சார்பாக டேவிட் நெரேஸ், றஸ்முஸ் ஹொஜ்லுன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

தனது அரையிறுதிப் போட்டியில் இத்தாலிய கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற ஏ.சி மிலனை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நடப்பு சீரி ஏ சம்பியன்களான நாப்போலியும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற இன்டர் மிலனை பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் வென்று இத்தாலிய கிண்ண சம்பியன்களான பொலொக்னாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X