Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, சென்னையில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பமாகின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ள அணியைத் இத்தொடரே தீர்மானிக்கவுள்ளதால் இத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இத்தொடரை குறைந்தது 2-1 எனக் கைப்பற்றினால் இறுதிப் போட்டிக்கு இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். மாறாக இங்கிலாந்து 1-0, 2-0, 2-1 அல்லது இந்தியா 1-0 என இத்தொடரை வென்றால் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இந்நிலையில், இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு குறைந்தது 3-0 என தொடரை வெல்ல வேண்டும்.
இதேவேளை, இத்தொடரை வென்றால் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு இந்தியா முன்னேறும். இங்கிலாந்து, 4-0 என வென்றால் அவ்வணி இரண்டாமிடத்துக்கு முன்னேற இந்தியா நான்காமிடத்துக்கு கீழிறங்கும். 3-1 என இங்கிலாந்து வென்றால் இந்தியா மூன்றாமிடத்துக்கு கீழிறங்கும். 3-0 என இங்கிலாந்து வென்றால், இங்கிலாந்து மூன்றாமிடத்துக்கு முன்னேற, இந்தியா நான்காமிடத்துக்கு கீழிறங்கும். 2-0 என இங்கிலாந்து வென்றால், மூன்றாமிடத்துக்கு இந்தியா கீழிறங்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், அணித்தலைவர் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, இரவிச்சந்திரன் அஷ்வின், செட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் அவ்வணிக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.
மறுபக்கமாக இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், அணித்தலைவர் ஜோ றூட், மொயின் அலி உள்ளிட்டோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.
15 minute ago
32 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
35 minute ago
42 minute ago