Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 31, சனிக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 01 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் டெல்லியில் இன்று ஏழு மணிக்கு ஆரம்பிக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி அணிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்து, இந்தியாவுக்கு விஜயம் செய்த அணிகளில், இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்களவு சவாலை வழங்கிய நிலையில், இந்தியா உச்சம் பெறாத இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் மேலும் கடுமையான சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு அணிக்கு மேலதிக பலத்தை வழங்கும் முகமாக, நியூசிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த, காயமடைந்த சகலதுறை வீரர் டொட் அஸ்டிலுக்குப் பதிலாக, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்ற டொஸ் டெய்லர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்தாண்டு மார்ச்சுக்குப் பின்னர், நியூசிலாந்தின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக்கான அணியில் சேர்த்துக்கொள்ளப்படாத டெய்லர், இந்திய மண்ணில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியமை காரணமாகவே குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.
டெய்லர் தவிர, மார்டின் கப்தில், கொலின் மன்றோ, டொம் புரூஸ் போன்ற அதிரடித் துடுப்பாட்ட வீரர்களுடனும் ட்ரெண்ட் போல்ட், டிம் செளதி, அடம் மில்ன், மற் ஹென்றி, இஷ் சோதி என பலமான பந்துவீச்சு வரிசையுடன் நியூசிலாந்து காணப்படுகின்றது.
மறுபக்கம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இந்திய அணியின் துடுப்பாட்டமும் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டமும் ஓரளவு சரிக்குச் சமனாக இருந்தபோதும் ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமாரின் பந்துவீச்சாலேயே தொடரை இந்தியா வென்றிருந்தது.
அந்தவகையில், இத்தொடரிலும் புவ்னேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராவுடன் யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் ஆகியோரின் பந்துவீச்சே தொடரைத் தீர்மானிக்கப் போகிறது.
இதேவேளை, இப்போட்டியுடன் ஓய்வுபெறுவதாக, இந்திய அணியின் சிரேஷ்ட பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அறிவித்துள்ளபோதும் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெறுவார் என்ற உறுதிப்பாடு வழங்கப்படாத நிலையில், இன்றைய போட்டியில் நெஹ்ரா விளையாடுவாரா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது.
இந்தியக் குழாமில் ஷ்ரேயாஸ் ஐயர், மொஹமட் சிராஜ் ஆகிய புதுமுக வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றபோதும் அவர்கள் அணியில் இடம்பெறமாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
30 May 2025