Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 28 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்குமிடையில் இடம்பெறவுள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்குமான இந்தியக் குழாமில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இறுதியாக 2014ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய கம்பீர், 2 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர்ப் போட்டிகளில் அண்மைக்காலமாகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்திவந்த கம்பீர், அண்மையில் இடம்பெற்ற துலீப் கிண்ணத்தில், 5 இனிங்ஸ்களில் 71.20 என்ற சராசரியில் 356 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
எனினும், முரளி விஜயோடு இணைந்து, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஷீகர் தவான் களமிறங்குவாரா அல்லது கம்பீருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, சிக்குன்குனியா காரணமாக முதலாவது டெஸ்டில் விளையாடியிருக்காத வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இரண்டாவது போட்டியிலும் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக, சுழற்பந்த வீச்சாளரான ஜயந்த் யாதவ், இந்தியக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
43 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
4 hours ago