Shanmugan Murugavel / 2021 மே 06 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தகுதி பெற்றுள்ளது.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றுள்ளது.
முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 1-1 என சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றிருந்தது.
செல்சி சார்பாக, திமோ வேர்னர், மேஸன் மெளன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026