2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இலங்கை - மே. தீவுகள் போட்டி புதனன்று

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, வியாழக்கிழமையிலிருந்து  நாளை மறுதினத்துக்கு முன்னகர்த்தப்பட்டது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் வண. மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் காரணமாக, நவம்பர் 12ஆம் திகதி தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மதிப்பளிக்கும் வகையிலேயே, நவம்பர் 11ஆம் திகதிக்கு, இப்போட்டி முன்னகர்த்தப்பட்டுள்ளது.

அத்தோடு, பப்பரே இசையும் தாள வாத்தியங்களும், இப்போட்டியில் இசைக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
12ஆம் திகதிக்காக வாங்கப்பட்ட நுழைவுச்சீட்டுக்கள், 11ஆம் திகதியில் பயன்படுத்தப்பட முடியுமெனவும், இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவிக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .