Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 14 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் தற்போது முடிவுக்கு வந்த ஸ்கொட்லாந்துக்கெதிரான குழு சி போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து, அணித்தலைவர் றிச்சி பெரிங்டனின் 49 (32), மைக்கல் ஜோன்ஸின் 33 (20), டொம் ப்றூஸின் 24 (18), ஒலிவர் டேவிட்ஸனின் ஆட்டமிழக்காத 20 (15) ஓட்டங்களுடன் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அடில் ரஷீட் 4-0-36-3, ஜொஃப்ரா ஆர்ச்சர் 4-0-24-2, லியம் டோஸன் 4-0-34-2, ஜேமி ஒவெர்டன் 4-0-23-1, சாம் கர்ரன் 3.4 -0-33-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 153 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, டொம் பன்டனின் ஆட்டமிழக்காத 63 (41), ஜேக்கப் பெத்தெல்லின் 32 (28), சாம் கர்ரனின் 28 (20), வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காத 16 (10) ஓட்டங்களோடு 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஒலிவர் டேவிட்சன் 2-0-12-1, பிரட் வேல் 3.2 -0-23-1, பிராட் கரி 3-0-21-1, பிரெண்டன் மக்முல்லன் 3-0-23-1, மைக்கல் லீஸ்க் 4-0-33-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக டொம் பன்டன் தெரிவானார்.
22 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
32 minute ago