Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகம், ஓமானில் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின்போது தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் பயன்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில், இனிங்ஸொன்றுக்கு ஒவ்வொரு அணியும் இரண்டு தீர்ப்பு மறுபரிசீலனைகளைக் கொண்டிக்கவுள்ளன.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் தீர்ப்பு மறுபரிசீலனை காணப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
இதேவேளை, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் முடிவுகளைப் பெறுவதற்கு இரண்டு அணிகளும் குறைந்தது 10 ஓவர்களிலாவது துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஐந்து ஓவர்களிலேயே முடிவு பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .