Shanmugan Murugavel / 2024 நவம்பர் 05 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடும்போது பங்களாதேஷின் ஷகிப் அல் ஹஸனின் பந்துவீச்சுப்பாணி குறித்து நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷகிப்புக்கு பந்துவீச்சுப்பாணி குறித்து ஆய்வை மேற்கொள்ளுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் வினவப்பட்டுள்ளார்.
முறைப்பாடு செய்யப்பட்ட செப்டெம்பரில் நடைபெற்ற போட்டியில் 63 ஓவர்கள் வீசியிருந்த ஷகிப் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
விளையாடுவதற்கு ஷகிப் மீது தடை விதிக்கப்படவில்லை என்றபோதும் அனுமதிக்கப்பட்ட இடமொன்றில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேலதிக சோதனைகளுக்கு உள்ளாக வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
4 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
23 minute ago