Shanmugan Murugavel / 2021 நவம்பர் 18 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், ஆர்ஜென்டீனாவில் நேற்றுக் காலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிரேஸிலுக்கு மிடையிலான போட்டி 0-0 என சமநிலையில் முடிவடைந்தது.
அந்தவகையில், உலகக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றது.
இதேவேளை, பொலிவியாவில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் உருகுவே தோற்றது. பொலிவியா சார்பாக, ஜுவான் கார்லோஸ் ஆர்சே இரண்டு கோல்களையும், மார்செலோ மார்டின்ஸ் மொரெனோ ஒரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், கொலம்பியாவில் நடைபெற்ற அவ்வணிக்கும், பராகுவேக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை, சிலியில் நடைபெற்ற அவ்வணிக்கும் ஈக்குவடோருக்குமிடையிலான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் சிலி தோற்றது. ஈக்குவடோ சார்பாக, எர்விஸ் எஸ்டுபினான், மொய்ஸஸ் கைசெடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
43 minute ago
2 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
25 Jan 2026