Editorial / 2017 ஜூன் 28 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, அவரை அம்முடிவிலிருந்து மாற்றாவிட்டால், எதிர்வரும் ஓகஸ்டிலேயே, அவர் இவ்வாறு ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாக, கடந்தாண்டே ஏபி டி வில்லியர்ஸ், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு அறிவித்திருந்தார் எனவும், அதிலிருந்து அவரை, பின்வாங்க வைத்திருந்தனர் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், எதிர்வரும் ஓகஸ்டில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடன் அவர் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர் ஓய்வுபெறுவார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
56 minute ago
1 hours ago