2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புதிய முகாமையாளராக துஷெலை நியமித்த செல்சி

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 27 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, தமது புதிய முகாமையாளராக பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னாள் பயிற்சியாளர் தோமஸ் துஷெலை 18 மாத ஒப்பந்தமொன்றில் நியமித்துள்ளதுடன், அதை நீடிப்பதற்கான தெரிவொன்றையும் கொண்டிருக்கின்றது.

தமது முன்னாள் முகாமையாளர் பிராங்க் லம்பார்ட்டை கடந்த திங்கட்கிழமை செல்சி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் செல்சியால் நியமிக்கப்பட்ட 11ஆவது முழுநேர முகாமையாளர் துஷெல் ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .