Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 மே 11 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, பாகிஸ்தானிடையேயான யுத்தநிறுத்த அறிவிப்பையடுத்து இந்தியன் பிறீமியர் லீக்கை (ஐ.பி.எல்) மீள ஆரம்பிப்பதற்கான நகர்வுகளை எடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் சகல அணிகளும் வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களை மீள இந்தியாவுக்கு அழைக்க முயல்கின்றன.
இந்திய அரசாங்கம் அனுமதியளித்தால் எதிர்வரும் வியாழக்கிழமை (15) அளவில் ஐ.பி.எல் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தானிடையேயான எல்லை தாண்டிய பதற்றங்களையடுத்து ஐ.பி.எல்லை ஒரு வாரத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெள்ளிக்கிழமை (09) இடைநிறுத்தியிருந்தது.
பல அணிகளின் வெளிநாட்டு வீரர்கள் வெள்ளிக்கிழமையும் (09), சனிக்கிழமையும் (10) இந்தியாவை விட்டு வெளியேறியிருந்தனர்.
இன்னும் 12 லீக் போட்டிகளிலும், நான்கு தகுதிகாண் போட்டிகளும் எஞ்சியிருக்கின்றன.
9 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
3 hours ago