Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்கால இலங்கை அணிகளில் தேர்வு செய்யப்படுவதற்கு தயாராக உள்ளதாக இலங்கையணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர் திறன் நிலையத்தில் பயிற்சியில் ஈடுபடும் குழாம்களுடன் மத்தியூஸ் இணையவுள்ளதுடன், எதிர்கால சர்வதேச சுற்றுப் பயணங்களில் கவனஞ் செலுத்தவுள்ளதாக அறிக்கை ஒன்றில் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இறுதியாக, இலங்கையை இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மத்தியூஸ் பங்கேற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .