Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2025 மே 01 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை - சேப்பாக்கத்தில் புதன்கிழமை (30) அன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு 8-வது தோல்வியாக அமைந்தது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே தரப்பில் சாம் கர்ரன் 88 ஓட்டங்கள் விளாசினார். டெலவால்ட் பிரேவிஸ் 32 ஓட்டங்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ஹாட்-ட்ரிக் உடன் 4 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சஹல்.
ஒரு கட்டத்தில் சென்னை அணி 200+ ஓட்டங்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19-வது ஓவரை சஹல் வீசி இருந்தார். 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 44 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் பிரியன்ஷ் ஆர்யார் மற்றும் பிரப்சிம்ரன் சிங். 23 ஓட்டங்கள் எடுத்து பிரியன்ஷ் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பஞ்சாப் அணியின் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் உடன் 72 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் பிரப்சிம்ரன் சிங். 36 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து பிரப்சிம்ரன் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 5 ஓட்டங்களில் வெளியேறினார்.
அருமையாக இலக்கை விரட்டிய அணியின் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர், 42 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஷாங் சிங், 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஷெக்டே 1 ஓட்டத்துடன் அவுட் ஆனார். 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களை எடுத்து பஞ்சாப் வெற்றி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 May 2025
09 May 2025