Shanmugan Murugavel / 2016 நவம்பர் 28 , மு.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளரான ஜொஸ் மொரின்யோ, மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் மைதானமான ஓல்ட் ட்ரபோர்ட்டில் இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது, ஒரு மாதத்தில், மைதானத்திலிருந்து மொரின்யோ வெளியேற்றப்படும் இரண்டாவது தடவை ஆகும்.
பேர்ண்லி அணியுடன் கடந்த மாதம் இடம்பெற்ற போட்டியில், இடைவேளை நேரத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றுக்காக மொரின்யோ வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மார்க் நொப்லேயுடன் தொடுகையில் இல்லாதபோது போல் பொக்பா பாய்ந்தமைக்காக, அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதனையடுத்து, தண்ணீர்ப் போத்தலொன்றை மொரின்யோ உதைந்தமையைத் தொடர்ந்தே, மைதானத்திலிருந்து மொரின்யோ வெளியேற்றப்பட்டிருந்தார்.
39 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
1 hours ago