Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 12 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான தனிநபர் பிரிவின் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் இன்று இடம்பெறவுள்ளன.
ஓர் அரையிறுதிப் போட்டியில், 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும் ஜேர்மனியின் ஜூலியா ஜோர்ஸமும் மோதவுள்ளதோடு, மற்றைய அரையிறுதிப் போட்டியில், உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், இலத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோவை எதிர்கொள்கிறார்.
உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், நேற்று முன்தினம் இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
ஜூலியா ஜோர்ஜஸ், நேற்று முன்தினம் இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 3-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
அங்கெலிக் கேர்பர், நேற்று முன்தினம் இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் டரினா கஸட்கினாவை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
ஜெலீனா ஒஸ்டபென்கோ, நேற்று முன்தினம் இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவாக்கியாவின் டொமினிக்கா சிபுல்கோவாவை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago