Shanmugan Murugavel / 2017 ஜனவரி 09 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளுக்கான தலைவர் மஷ்ரபி மோர்தஸாவுக்கு, பெருவிரல் முறிவு ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவர், 4 தொடக்கம் 6 வாரங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கெதிரான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியின் போதே, மோர்தஸாவுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து எக்ஸ் கதிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துத் தொடரில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் இரண்டிலும், பங்களாதேஷ் அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026