2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கொலம்பியா முதற் தடவையாக காலிறுதிப் போட்டியில்

A.P.Mathan   / 2014 ஜூன் 29 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாம் சுற்றின்  இரண்டாவது போட்டி கொலம்பியா, உருகுவே அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொலம்பியா அணி 2 இற்கு 0  என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம்  இரண்டாவது அணியாக காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 
 
ஜேம்ஸ் ரொட்றிகஸ் 28ஆவது மற்றும் 50ஆவது நிமிடங்களில் அடித்த கோல் மூலம் கொலம்பியா அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் ரொட்றிகஸ் தெரிவானார். ஐந்தாவது உலகக் கிண்ண தொடரில் விளையாடும் கொலம்பியா அணி முதற் தடவையாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
 
வெற்றிகளைப் பெற்றுள்ள பிரேசில், கொலம்பியா அணிகள் ஜூலை மாதம் நான்காம் திகதி காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X