2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மேற்கிந்திய தீவுகள் தொடரைக் கைப்பற்றியது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை  3 இற்கு 0 என கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் டினேஷ் ராம்டின் 121 பந்துகளில் 169 ஓட்டங்களையும் டரின் ப்ராவோ 124 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். மூன்றாவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட உலக சாதனை இணைப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக அல் அமின் ஹொசைன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முஸ்பிகீர் ரகீம் 72 ஓட்டங்களையும், தமீம் இக்பால் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரவி ராம்போல் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.  போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ரவி ராம்போல் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .