2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆஷஸ்: தேர்வாளர்கள் தவறு செய்துள்ளனர்

Administrator   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரில், அவுஸ்திரேலிய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தமை தொடர்பில், அணியின் தேர்வாளர்கள் தவறு செய்துள்ளதாக, அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமன் ஏற்றுக் கொண்டுள்ளார்.


தேர்வாளர்களில் டெரன் லீமனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வாளர்கள் தவறுகளைச் செய்துள்ளார்களாக எனக் கேட்கப்பட்டமைக்கு, “அதிகமாக. பயிற்றுநராகவும் தேர்வாளர்களாகவும் நாங்கள் சில சந்தர்ப்பங்களில் தவறு செய்துள்ளோம். அதில் எந்தவிதச் சந்தேகங்களும் கிடையாது” எனத் தெரிவித்த, வீரர்களைப் போன்று, தாங்களும் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த அவர், எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பது தொடர்பில் பணியாற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

வெவ்வேறான நிலைமைகளில், எந்த அணியைத் தெரிவுசெய்வது தொடர்பாகவும், சழலும் ஆடுகளங்களுக்கும் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களுக்குமிடையில் மாற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வது தொடர்பாகவும் பணியாற்ற வேண்டுமென அவர் தெரிவித்தார். 

சிந்திக்க வேண்டிய விடயங்கள் உள்ளதாகத் தெரிவித்த அவர், என்ன பிழையாக இடம்பெற்றது என்பது தொடர்பாக மீளாய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .