2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சாவுடன் வீதியில் நடமாடியதாகக் கூறப்படும் 65 வயதுடைய ஒருவரை மட்டக்களப்பு, ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 4600 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிகளில் உலாவும் இச்சந்தேக நபர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.

இச்சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X