Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 11 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின்
வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது இவ்வாண்டு நடைபெறமாட்டாது
என ஆலய பரிபாலனசபையினர் அறிவித்துள்ளனர்.
கொவிட்ட நிலைமை காரணமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக
பரிபாலசபையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக அமையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மஹோற்சவம் 15 பணியாளர்களுடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால். மஹோற்சவத்தை நாடாத்து இல்லையென முடிவு எட்டப்பட்டுள்ளது என ஆலய தலைவரும் வண்ணக்கருமாகிய பூபாலபிள்ளை
சுரேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
23 minute ago
47 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago
5 hours ago