Freelancer / 2023 நவம்பர் 08 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ. எல். ஜவ்பர்கான்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு எல்லையிலுள்ள ஆரையம்பதியில் வர்த்தக நிலையங்கள் மீது தீப் பரவியதில் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள் வாகனங்கள் கழுவும் சேர்விஸ் கராஜ் என்பன எரிந்து நாசமாகியுள்ளதுடன் வாகனங்களும் எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளன.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் படையினர் இராணுவத்தினர் பொது மக்கள் இணைந்து தீ யை அணைத்த போதிலும் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.
தீபரவலுக்கான காரணம் கண்டறியப் படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025