Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 24 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு தளவாய் பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை தாக்கி தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை இன்று செவ்வாய்கிழமை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தினமான திங்கட்கிழமை (16) இரவு,தளவாய் பிரதேசத்திலுள்ள வீட்டில் சட்டத்தரணி காத்தமுத்து ஜெகநாதன் அவரது மனைவியுடன் இருந்தபோது பொல்லு தடிகளுடன் வந்து மூவர் மின்குமிழை அணைத்துவிட்டு இருவரையும் தாக்கிவிட்டு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்து அடையாள அணிவகுப்புக்குட்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
25 minute ago
32 minute ago