Suganthini Ratnam / 2016 ஜூலை 03 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
சுற்றுலா வந்து மட்டக்களப்பு வாகரை, காயங்கேணி கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றிவந்த கொழும்பு 02, பிரேபுருக் பிளேஸைச் சேர்ந்த ஹரீஸ் டி பெர்ணான்டோ (வயது – 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நண்பர்கள் ஏழு பேர் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலாவாக மட்டக்களப்புக்கு வந்துள்ளனர். இந்நிலையிலேயே காயங்கேணிக் கடலில் நீராடியபோது இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி மூச்சு திணறியதால் ஏற்பட்ட மரணம் என பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago