Editorial / 2022 ஜனவரி 09 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலார்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு, மாவட்டத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரின் பங்குபற்றலுடன், ஏறாவூரில் நேற்று (08) மாலை நடைபெற்றது.
2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், செயற் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
சம்மேளனத்தின் புதிய தலைவராக ஏ.எம். அஸ்மி தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலாளராக எம்.ரீ.எம்.பாரிஸ், பொருளாளராக ஏ.எச்.ஏ.ஹூசைன் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரதித் தலைவர்களாக ஐ.எம்.ஐ.பாறூக், எம்.எஸ்.எம்.சஜீ, உப செயலாளராக எம்.ஐ.அப்துல் நஸார், ஊடக இணைப்பாளர்களாக எஸ்.எம்.எம்.முர்ஷித், எம்.ஏ.சீ.எம்.ஜலீஸ், எம்.ஜீ.ஏ.நாஸர், கணக்குப் பரிசோதகராக எச்.எம்.எம்.பர்ஸான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
10 minute ago
7 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
7 hours ago
04 Feb 2026