2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

றோலில் பீடி; உணவகத்துக்கு சீல் வைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட றோல் ஒன்றினுள் பற்றவைத்த பீடி காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வுணவகத்தை பொதுச் சுகாரதாரப் பரிசோதகர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்து மூடியுள்ளனர்.  

குறித்த உணவகத்துக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், றோல் ஒன்றை வாங்கி உட்கொள்ள முற்பட்டுள்ளார். இதன்போது அந்த றோலில் பற்றவைத்த பீடி காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடிப் பொதுச் சுகாதாரப் பரிசோதர்களுக்கு குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து, குறித்த உணவகத்துக்குச் சென்ற காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தலைமையிலான சென்ற குழுவினர், உணவகத்தில் சோதனை மேற்கொண்டு உணவகத்தை சீல் வைத்து மூடியுள்ளனர்.
குறித்த உணவக உரிமையாளரை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடிப் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X