2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

வான் குடைசாய்ந்து விபத்து; ஒருவர் காயம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் கடவத்தமடு பிரதேசத்தில் வான் ஒன்றின் டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளாரென வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்துக்கு திருமண நிகழ்வொன்றின் கலந்துகொள்வதற்காக பயணித்த வானே, நேற்று (10) மாலை டயர் வெடித்து, அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ளது.

இதில் வான் சேதமடைந்துள்ள நிலையில், அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X