Editorial / 2020 மே 28 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் மாவட்டச் செயலாளரிடம் பல வேண்டுகோள்களை உள்ளடக்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டத் தகவல் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவிடம் மாவட்டச் செயலகத்தில் வைத்து நேற்று (27) கையளிக்கப்பட்ட அந்த மகஜரில் பட்டதாரிகளது வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் இடைநிறுத்தப்பட்டது தொடர்பாக தீர்வைப் பெற்று தர வேண்டும், பயிற்சிக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள் பட்டதாரிகள் என்ற வகையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வருமானமின்றி இருக்கின்ற பட்டதாரிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago