2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆரையம்பதியில் வாகன விபத்து

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ஜிப்ரான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் வாகன விபத்தொன்று நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல்பண்டார தெரிவித்தார்.

இந்த விபத்தின்போது எவரும் எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லையென தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, முச்சக்கர  வண்டியொன்று முற்றாக தேமடைந்துள்ளதாக கூறினார்.

விரைவாகச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது பின்னால் வந்த லொறி மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த முச்சக்கரவண்டி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .