A.P.Mathan / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் மூக்கர்ரகல் அம்புஸ்குடா பிரதேசத்தில் இருந்து பதினைந்து (15) கிலோகிராம் மதிக்கத்தக்க கிளைமோர் குண்டு ஒன்று நேற்று முந்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தெரிவித்தார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்தை சோதனையிட்டபோது இக் கிளைமோர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இக் கிளைமோரில் 'கப்டன் பவான் (ஐயா) – 99, 15 கி.கி.தகர்ப்பு வெடிமருந்து 2005 – 0054'என்று பொறிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 54ஆவது குண்டாக இது இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
46 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
5 hours ago