2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

தருஸ்மன் அறிக்கைக்கு எதிரான ஒரு நாள் உண்ணாவிரதம் முடிவு

Super User   / 2011 மே 10 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

ஓட்டமாவடி பிரதேசத்தில் தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை இன்று பிற்பகல் 05.30 மணியளவில் முடித்துக் கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதான வீதி சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஏ விஷன் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரத நிகழ்வினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மாயில், கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.நியாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தில் இருந்தவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.


  Comments - 0

  • Maneez Wednesday, 11 May 2011 07:25 PM

    இலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்றை வெளிக்காட்டிய சகோதரர்களுக்கு நன்றிகள். நௌஷர்ட் மாஸ்டருக்கு எமது ஆதரவு என்றும் உண்டு.

    Reply : 0       0

    Maneez Wednesday, 11 May 2011 07:31 PM

    நல்லது செய்து இருக்குறீங்க மாஸ்டர். வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Jawath UL Thursday, 12 May 2011 03:23 AM

    அன்புக்குரிய சகோதரர்களே ஏன் இந்த அதி மேதாவிகளான அரசியல் மேதைகளை உங்களுக்கு பக்கத்தில் இன்னும் வைத்து இருக்கிறிங்க.

    Reply : 0       0

    Daki Anam Thursday, 12 May 2011 06:31 PM

    சகோதரர் ஜவாத் அவர்களே இப்ப எந்த நிகழ்வு நடந்தாலும் அதில் அனேகமாக அரசியல் இருக்கத்தானே செய்து. அதைத்தான் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் விரும்புகிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .