2026 மே 04, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்த பட்டதாரிகளுக்கு அடையாள அட்டைகள் விநியோகம்

Kogilavani   / 2012 மார்ச் 20 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்ட மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியை சேர்ந்த தமிழ் பட்டதாரிகளுக்கு கட்சியின் அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை வாழைச்சேனை லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்திடப்பட்ட அடையாள அட்டைகள் 200 பட்டதாரிகளுக்க வழங்கப்பட்டன.

கல்குடா தொகுதி லங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் கலாநிதி டி.எம்.சந்திரபாலவின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .