2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் காந்தி, விபுலானந்தர் சிலை உட்பட பலரின் உருவச் சிலைகள் உடைப்பு

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ரி.லோஹித்)


மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் ஞாபகார்த்த சிலை ஆகியன இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு ஆனைப்பந்தி வித்தியாலயத்திலுள்ள சுவாமி விபுலானந்தர் சிலை,  மட்டக்களப்பு கல்வி அலுவலகத்திற்கு முன்னாலுள்ள  புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, ஆகியோரின் உருவச்சிலைகளும் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியில் இருந்த சுவாமி விவேகானந்தரின் மற்றொரு உருவச்சிலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சேதப்படுத்தப்பட்டது   நேற்றுமுன்தினம் மீண்டும் அதே இடத்தில் விவேகானந்தரின்  உருவச்சிலைசிலை திறக்கப்பட்டது.

இந்நிலையில், ஆனைப்பந்தியிலுள்ள விவேகானந்தர் சிலை உட்பட பல சிலைகள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளன.



  Comments - 0

  • neethan Friday, 06 April 2012 04:39 PM

    சிலை உடைப்பின் பின்னணி இனவாதமா? மதவாதமா? இல்லை மனநோயாளிகளின் மனம் மருண்ட செயலா?

    Reply : 0       0

    aboosulaim Friday, 06 April 2012 04:57 PM

    naattil வேலை இல்லாத கழுதைகள் கூடி விட்டது. அப்பிடியான சில கழுதைகளின் விசமித்தனம் தான் இது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறின் இது தொடர் கதைதான்.

    Reply : 0       0

    Mohd Rizvi Maruthamunai... Friday, 06 April 2012 05:40 PM

    இதனை எமது பிரதேசத்தில் வாழும் இரு சமூகத்தினரும் மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும். நீண்ட கால இடை வேலைக்குப்பிறகு எமது பகுதியில் ஏற்பட்டிருக்கும் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் சில விசமிகளின் சதி வேலையாக இருக்கும். எனவே குற்ற்றவாளி யாராக இருந்தாலும் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் இயங்கும் சக்தியை kaithuseithu thakuntha paadam pugadda வேண்டும்...

    Reply : 0       0

    Abdhul Friday, 06 April 2012 06:01 PM

    பாவம் இலங்கை அழிவை நோக்கி செல்கின்றது

    Reply : 0       0

    Hari Friday, 06 April 2012 06:04 PM

    சார், மிகவும் மோசமான கொடூரம் என்டுத்தான் நான் இதனைக் காண்கிறேன். உடனடியாக பின்னணியில் உள்ளவர்களை அரசு கண்டுபிடிக்க வேண்டும். இதன் கருத்து பலவாக அமையும் என நினைக்கிறேன்.

    Reply : 0       0

    pathmadeva Friday, 06 April 2012 06:05 PM

    இது அநாகரிகத்தின் உச்ச எல்லை!!

    Reply : 0       0

    KS Friday, 06 April 2012 06:20 PM

    திட்டமிடபட்டு ஒரு கும்பல் செயற்படுகின்றது. பின்னணி பற்றி அவதானமாக இருக்க வேண்டியது தமிழ், முஸ்லிம் சகோதரர்களது தேவை.

    Reply : 0       0

    neethan Friday, 06 April 2012 08:49 PM

    காட்டுமிராண்டிகளின் காவாலித்தனம். ஆசியாவின் ஆச்சரியமான சிறிலங்கா.

    Reply : 0       0

    AJ Friday, 06 April 2012 10:11 PM

    This is the situation in sl. who did this?. Poor and bad Lanka.

    Reply : 0       0

    siriththiran Friday, 06 April 2012 10:28 PM

    படிப்பறிவு இல்லாத குறுகிய மனம் படைத்தவர்களின் ஈனச் செயல் ...

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Friday, 06 April 2012 11:39 PM

    இந்த மாதிரி ஈனச்செயலை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவு ரொம்ப மோசமாகலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .