2026 மே 04, திங்கட்கிழமை

அதிகரிக்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 12 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 3,747 சமுர்த்திக் குடும்பங்களுக்கு அதிரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கு நிகழ்வு வாழைச்சேனை சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதியின் கடந்த வரவு - செலவுத்திட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற  திட்டத்திற்கு அமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கும் திட்டம் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே வாழைச்சேனையில் 12 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது.

சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்  தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்துகொண்டு சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கிவைத்தார்.

சமுர்த்திப் பயனாளிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த பொருட்களுக்குப் பதிலாக இம்முறை தொடக்கம் பணமாக ஒரு தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 525 ரூபா வீதம் வழங்கப்படுகி;றது என சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தேவமனோகரி பாஸ்கரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .