2026 மே 04, திங்கட்கிழமை

சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி உதவி பெரும் குடும்பங்களைச் சேர்ந்த உயர் வகுப்புப் மாணவர்களுக்கான சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான கொடுப்பணவுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

நான்கு பாடசாலைகளில் இருந்து முப்பத்திரெண்டு (32) மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு வருடத்திற்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என்று சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .