2026 மே 04, திங்கட்கிழமை

சேற்றுக்குடாவில் வீடு உடைத்துக் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு, சேற்றுக்குடா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீடொன்று உடைக்கப்பட்டு  நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளும் 50,000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இல.49, விபுலானந்தா வீதி சேற்றுக்குடாவில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தனது கணவர்  நுவரெலியா சென்றதாகவும் இந்த  நிலையில் இரவு தனது பிள்ளையுடன் தான் தாய் வீட்டிற்கு சென்றதாகவும் இதன்போது வீட்டில் சத்தம் கேட்பதாக  அயல் வீட்டார் கணவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். பின்னர் கணவர் தனக்கு இது தொடர்பில் தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக தனது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு பணமும் தங்கநகைகளும்; கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்தின குறித்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டார்.  இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .