2026 மே 04, திங்கட்கிழமை

திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளிலிருந்து மக்களின் பங்களிப்புடன் திண்மக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் செயற்றிட்டத்தை  நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை ஆரம்பித்துள்ளது.

யுனிசெப் நிறுவனத்தின் பங்களிப்புடன் இதன் ஆரம்ப செயற்றிட்டம் சின்ன உப்போடையில் நடைபெற்றது.  திண்மக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுதல், அவற்றினை மீள்சுழற்சி மூலம் பசளையாக மாற்றுவதற்கு பொதுமக்கள் வழங்கவேண்டிய பங்களிப்பு, கழிவுகளை அகற்றவேண்டிய முறை தொடர்பில் இங்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன் சின்ன உப்போடை, பெரிய உப்போடை மக்களின் பங்களிப்புடன் அப்பகுதியிலுள்ள திண்மக்கழிவுகளை அகற்றுவதற்காக திண்மக்கழிவுகள் அகற்றும் இரண்டு வாகனங்கள் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு ஆணையாளர் கே.சிவநாதன், யுனிசெப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம அதிகாரி அசாதூர் ரஹ்மான், மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .