2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பவர்கள் அலிசாஹீர் மௌலானவுக்கும் விருப்பு வாக்களிக்க வேண்டும்: பசீர

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பவர்கள் அலிசாஹீர் மௌலானவுக்கும் ஒரு விருப்பு வாக்கை அளிக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

'மக்களே நீதிபதி பசீரின் வாக்கு மூலம்' என்னும் தலைப்பில் ஏறாவூரில்  நேற்று திங்கட்கிழமை  மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 90,000 முஸ்லிம் வாக்குகள் உள்ளன.  மட்டக்களப்பு  மாவட்ட முஸ்லிம் மக்கள் சரியாக வாக்களித்தால்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 3 பிரதிநிதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து 3 பிரதிநிதிகளையும் வெற்றியடையச் செய்யமுடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னமான வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பவர்கள் அதில் போட்டியிடும் அலிசாஹீர் மௌலானாவுக்கும் ஒரு விருப்பை வாக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அவரின் வெற்றிக்காக பிரார்த்திக்கின்றேன். அவரும் நானும் இந்த ஏறாவூரை பிரிப்பதற்கு ஆயத்தம் இல்லை. அவரின் ஆதரவாளர்கள் எனக்கும் வாக்களித்து உள்ளனர். இந்தத் தேர்தலில் நான் அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் கொண்டுவர முயற்சித்தேன் ஆனால் இறைவனின் நாட்டம் அது நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலுக்கு முன்பு அலிசாஹீர் மௌலானாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் கொண்டுவர முயற்சி செய்தேன். மௌலானாவும் வருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால் இறுதித்தருணத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இட்டதால் முஸ்லிம் காங்கிரஸுக்குள் வரமுடியாமல் போனது.

எனினும், தேர்தல் முடிந்த பின்னர்; அலிசாஹீர் மௌலானாவை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன். இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுவதுடன்  அலிசாஹீர் மௌலானாவும்  இதில் வெற்றியடையவேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் தலைவர் மாஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 2000ஆம் ஆண்டு கனவை நிறைவேற்றும் சந்தர்ப்பமாக இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வந்துள்ளது. அது தான் முஸ்லிம் முதலமைச்சராகும். இலங்கையில் ஒரு முதலமைச்சர் மாநாடு நடைபெறும்போது, அந்த மாநாட்டில் முஸ்லிம் முதலமைச்சர் பங்குபற்ற வேண்டும். அவரின் குரல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் குரலாக அதில் ஒலிக்க வேண்டும் என்ற கனவு மர்ஹும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்புக்கு இருந்தது. அதை நிறைவேற்றும் சந்தர்ப்பமாக நாம் இந்தத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

நான் கிழக்கு மாகாண முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்காக குரல் கொடுத்து வருகின்றேன். கடந்த 2 வருடங்களாக இதற்கான குரலை கொடுத்து வருகின்றேன். தற்போதும் இதையே பேசுகின்றேன். தேர்தல் முடிந்த பின்னரும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.

அஷ்ரப் அன்று கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர், செயலாளர், தவிசாளர், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த சில தேர்தல்களின்போது நான் அமைத்த வியூகங்களை எனது கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்தக் கட்சி தோல்வி அடையவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டது' என்றார்.



  Comments - 0

  • hakeem Tuesday, 21 August 2012 06:20 AM

    உங்களது வியூகத்தை நிட்சயம் அல்லாஹ் நிறைவேற்றுவான். அதுதான் அலிசாஹிர் மௌலானாவின் வெற்றி அது உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக அலிசாஹிர் மௌலான கிழக்கின் முதலமைச்சர் அவர் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்குப் பொருத்தமான மனிதர். இரன்டு சமூகதிற்கும் நிச்சயம் கிடைக்க பிரார்திப்போம். நன்றி பஷிர் சேகுதாவுத்.

    Reply : 0       0

    muhammad ramalan Tuesday, 21 August 2012 06:46 AM

    முஸ்லிம் காங்கிரஸுக்கு பொருத்தமான தேசிய‌ தலைவர் பஷிர் சேகுதாவூத்தான். நிச்சயம் ஒரு காலத்தில் வருவது நிச்சயம்.

    Reply : 0       0

    SLMC pooraali Tuesday, 21 August 2012 01:37 PM

    மு. கா. தவிசாளர் அமைச்சர் பசீர், ஐ.ம.சு.மு வேட்பாளர் அலி சாஹிர் அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு பகிரங்கமாக அறிவித்துள்ளார். பல கடந்தகால, உண்மைகளை பகிர்ந்து கொண்டார். தலைவர் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு செய்திருந்த துரோகத்தையும் சொல்லி விள‌க்கினார். 4 மணி நேர பேச்சு. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது............................... வண்டி ஓட சக்கரங்கள் இரண்டும் இங்கு வேண்டும்... இரண்டில் ஒன்று இல்லை என்றால். எந்த வண்டி ஓடும்......

    Reply : 0       0

    Mohamed Wednesday, 22 August 2012 02:48 AM

    அடுத்த குருநில மன்னா் உருவாகின்றார் போல ....
    ஐயா, ஊரா கோழி அறுத்து உம்மா பேரில கத்தம் ஓதுவது ஒரு வகை ஆனா உம்மாவையே அறுத்து மாமி மகனுக்கு பிரியானி போட்டிருப்பது இன்னுமொரு வகை .... எது எப்படியானாலும் எல்லோருடைய உள்ளத்தையும் அதில் எழும் எண்ணங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .